| உருகெழு மூதூர்
ஒருநூறு வேள்வி உரவோன் தனக்குப்
பெருவிழா அறைந்ததும்; பெருகியது அலர்எனச்
சிதைந்த நெஞ்சிற் சித்திரா பதிதான்
வயந்த மாலையால் மாதவிக்கு உரைத்ததும்;
மணிமே கலைதான் மாமலர் கொய்ய
அணிமலர்ப் பூம்பொழில் அகவயின் சென்றதும்
ஆங்குஅப் பூம்பொழில் அரசிளங் குமரனைப்
பாங்கில் கண்டுஅவள் பளிக்கறை புக்கதும்
பளிக்கறை புக்க பாவையைக் கண்டவன்
துளக்குறு நெஞ்சில் துயரொடும் போயபின்
மணிமே கலாதெய்வம் வந்துதோன் றியதும்
மணிமே கலையைமணி பல்லவத்து உய்த்ததும்
உவவன மருங்கின்அவ் வுரைசால் தெய்வதம்
|