| செய் கென்றதும் சிறைவீடு செய்ததும்
நறுமலர்க் கோதைக்கு நல்லறம் உரைத்துஆங்கு
ஆய்வளை ஆபுத் திரன்நாடு அடைந்ததும்
ஆங்குஅவன் தன்னோடு அணியிழை போகி
ஓங்கிய மணிபல் லவத்திடை உற்றதும்
உற்றவள் ஆங்குஓர் உயர்ந்தவன் வடிவாய்ப்
பொன்கொடி வஞ்சியில் பொருந்திய வண்ணமும்
நவைஅறு நன்பொருள் உரைமி னோஎனச்
சமயக் கணக்கர் தம்திறம் கேட்டதும்
ஆங்குஅத் தாயரோடு அறவணர்த் தேர்ந்து
பூங்கொடி கச்சி மாநகர் புக்கதும்
புக்கவள் கொண்ட பொய்உருக் களைந்து
மற்றவர் பாதம் வணங்கிய வண்ணமும்
தவத்திறம் பூண்டு தருமம் கேட்டுப்
பவத்திறம் அறுகெனப் பாவை நோற்றதும்
இளங்கோ வேந்தன் அருளிக்
|