| சமயக் கணக்கரும் தம்துறை போகிய
அமயக் கணக்கரும் அகலார் ஆகிக்
கரந்துஉரு எய்திய கடவு ளாளரும்
பரந்துஒருங்கு ஈண்டிய பாடை மாக்களும்
ஐம்பெருங் குழுவும் எண்பேர் ஆயமும்
வந்துஒருங்கு குழீஇ வான்பதி தன்னுள்
கொடித்தேர்த் தானைக் கொற்றவன் துயரம்
விடுத்த பூதம் விழாக்கோள் மறப்பின்
மடித்த செவ்வாய் வல்எயிறு இலங்க
இடிக்குரல் முழக்கத்து இடும்பை செய்திடும்
தொடுத்த பாசத்துத் தொல்பதி நரகரைப்
புடைத்துஉணும் பூதமும் பொருந்தா தாயிடும்
மாயிரு ஞாலத்து அரசுதலை ஈண்டும்
ஆயிரம் கண்ணோன் விழாக்கால் கொள்கென
வச்சிரக் கோட்டத்து மணம்கெழு முரசம்
கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி
ஏற்றுஉரி போ
|