மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   195
Zoom In NormalZoom Out

சுகடிப் பிடூஉம் முதுக்குடிப் பிறந்தோன்
திருவிழை மூதூர் வாழ்கென்று ஏத்தி
வானமும் மாரி பொழிக மன்னவன்
கோள்நிலை திரியாக் கோலோன் ஆகுக
தீவகச் சாந்தி செய்தரு நல்நாள்
ஆயிரம் கண்ணோன் தன்னோடு ஆங்குஉள
நால்வேறு தேவரும் நலத்தகு சிறப்பில்
பால்வேறு தேவரும் இப்பதிப் படர்ந்து
மன்னன் கரிகால் வளவன் நீங்கியநாள்
இந்நகர் போல்வதுஓர் இயல்பினது ஆகிப்
பொன்னகர் வறிதாப் போதுவர் என்பது
தொல்நிலை உணர்ந்தோர் துணிபொருள் ஆதலின்,
தோரண வீதியும் தோம்அறு கோட்டியும்
பூரண கும்பமும் பொலம்பா லிகைகளும்
பாவை விளக்கும் பலவுடன் பரப்புமின்
காய்க்