| துன்பம் பிறவார் உறுவது பெரும்பேர் இன்பம் பற்றின் வருவது முன்னது பின்னது அற்றோர் உறுவது அறிகென்று அருளி ஐவகைச் சீலத்து அமைதியும் காட்டி உய்வகை இவைகொள்என்று உரவோன் அருளினன் மைத்தடங் கண்ணார் தமக்கும்என் பயந்த சித்திரா பதிக்கும் செப்பு நீஎன, ஆங்குஅவள் உரைகேட்டு் அரும்பெறல் மாமணி ஓங்குதிரைப் பெருங்கடல் வீழ்த்தோர் போன்று மையல் நெஞ்சமொடு வயந்த மாலையும் கையற்றுப் பெயர்ந்தனள் காரிகை திறத்துஎன். |