மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   204
Zoom In NormalZoom Out

க்கும்
சுதமதி கேட்டுத் துயரொடும் கூறும்
குரவர்க்கு உற்ற கொடுந்துயர் கேட்டுத்
தணியாத் துன்பம் தலைத்தலை எய்தும்
மணிமேக கலைதன் மதிமுகம் தன்னுள்
அணிதிகழ் நீலத்து ஆய்மலர் ஓட்டிய
கடைமணி உகுநீர் கண்டனன் ஆயின்
படையிட்டு நடுங்கும் காமன் பாவையை
ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ
பேடியர் அன்றோ பெற்றியின் நின்றிடின்
ஆங்ஙனம் அன்றியும் அணியிழை கேளாய்
ஈங்குஇந் நகரத்து யான்வருங் காரணம்
பாரா வாரம் பல்வளம் பழுநிய
காராளர் சண்பையில் கௌசிகன் என்போன்
இருபிறப் பாளன் ஒருமகள் உள்ளேன்
ஒருதனி அஞ்சேன் ஓரா நெஞ்சமோடு
ஆரா மத்திடை அலர்கொய் வேன்தனை
மாருத வேகன்