| ணவர் விழையார் வானவர் அல்லது பாடுவண்டு இமிரா பல்மரம் யாவையும் வாடா மாமலர் மாலைகள் தூக்கலின் கைபெய் பாசத்துப் பூதம் காக்கும்என்று உய்யா னத்திடை உணர்ந்தோர் செல்லார் வெங்கதிர் வெம்மையின் விரிசிறை இழந்த சம்பாதி இருந்த சம்பாதி வனமும் தவாநீர்க் காவிரிப் பாவைதன் தாதை கவேரன் ஆங்கு இருந்த கவேர வனமும் மூப்புடை முதுமைய தாக்குஅணங்கு உடைய யாப்புடைத்து ஆக அறிந்தோர் எய்தார் அருளும் அன்பும் ஆர்உயிர் ஓம்பும் ஒருபெரும் பூட்கையும் ஒழியா நோன்பின் பகவனது ஆணையின் பல்மரம் பூக்கும் உவவனம் என்பதுஒன்று உண்டு அதன் உள்ளது விளிப்புஅறை போகாது மெய்புறத்து இடூஉம் |