| பளிக்கறை மண்டபம் உண்டுஅதன் உள்ளது தூநிற மாமணிச் சுடரொளி விரிந்த தாமரைப் பீடிகை தான்உண்டு ஆங்குஇடின் அரும்புஅவிழ் செய்யும் அலர்ந்தன வாடா சுரும்புஇனம் மூசா தொல்யாண்டு கழியினும் மறந்தேன் அதன்திறம் மாதவி கேளாய் கடம்பூண்டுஓர் தெய்வம் கருத்திடை வைத்தோர் ஆங்குஅவர் அடிக்குஇடின் அவர்அடி தான்உறும் நீங்காது யாங்கணும் நினைப்பில ராய்இடின் ஈங்குஇதன் காரணம் என்னை என்றியேல் சிந்தை இன்றியும் செய்வினை உறும்எனும் வெந்திறல் நோன்பிகள் விழுமம் கொள்ளவும் செய்வினை சிந்தை இன்றுஎனின் யாவதும் எய்தாது என்போர்க்கு ஏது வாகவும் பயம்கெழு மாமலர் இட்டுக் காட்ட மயன்பண்டு் இழை |