| மண்ணா மேனியன் வருவோன் தன்னை வந்தீர் அடிகள்நும் மலர்அடி தொழுதேன் எந்தம் அடிகள் எம்உரை கேண்மோ அழுக்குஉடை யாக்கையில் புகுந்த நும்உயிர் புழுக்கறைப் பட்டோர் போன்றுஉளம் வருந்தாது இம்மையும் மறுமையும் இறுதிஇல் இன்பமும் தன்வயின் தரூஉம்என் தலைமகன் உரைத்தது கொலையும் உண்டோ கொழுமடல் தெங்கின் விளைபூந் தேறலின் மெய்த்தவத் தீரே உண்டு தெளிந்துஇவ் யோகத்து உறுபயன் கண்டால் எம்மையும் கையுதிர்க் கொண்ம்என உண்ணா நோன்பி தன்னொடும் சூள்உற்று உண்ம்என இரக்கும்ஓர் களிமகன் பின்னரும் கணவிரி மாலையில் கட்டிய திரள்புயன் குவிமுகிழ் எருக்கில் கோத்த மாலையன் சிதவல் துணியொடு |