மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   210
Zoom In NormalZoom Out

சேண்ஓங்கு நெடுஞ்சினைத்
ததர்வீழ்பு ஒடித்துக் கட்டிய உடையினன்
வெண்பலி சாந்தம் மெய்ம்முழுது உரீஇப்
பண்புஇல் கிளவி பலரொடும் உரைத்தாங்கு
அழூஉம் விழூஉம் அரற்றும் கூஉம்
தொழூஉம் எழூஉம் சுழலலும் சுழலும்
ஓடலும் ஓடும் ஒருசிறை ஒதுங்கி
நீடலும் நீடும் நிழலொடு மறலும்
மையல் உற்ற மகன்பின் வருந்திக்
கையறு துன்பம் கண்டுநிற் குநரும்
சுரியல் தாடி மருள்படு பூங்குழல்
பவளச் செவ்வாய்த் தவள வாள்நகை
ஒள்அரி நெடுங்கண் வெள்ளிவெண் தோட்டுக்
கருங்கொடிப் புருவத்து மருங்குவளை பிறைநுதல்
காந்தள்அம் செங்கை ஏந்துஇள வனமுலை
அகன்ற அல்குல் அந்நுண் மருங்குல்
இகந்த வட்டு