| டை எழுதுவரிக் கோலத்து வாணன் பேரூர் மறுகிடைத் தோன்றி நீணிலம் அளந்தோன் மகன்முன் ஆடிய பேடிக் கோலத்துப் பேடுகாண் குநரும் வம்ப மாக்கள் கம்பலை மூதூர்ச் சுடுமண் ஓங்கிய நெடுநிலை மனைதொறும் மைஅறு படிவத்து வானவர் முதலா எவ்வகை உயிர்களும் உவமம் காட்டி வெண்சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய கண்கவர் ஓவியம் கண்டுநிற் குநரும் விழவுஆற்றுப் படுத்த கழிபெரு வீதியில் பொன்நாண் கோத்த நன்மணிக் கோவை ஐயவி அப்பிய நெய்அணி முச்சி மயிர்ப்புறம் சுற்றிய கயிற்கடை முக்காழ் பொலம்பிறைச் சென்னி நலம்பெறத் தாழச் செவ்வாய்க் |