| குதலை மெய்பெறா மழலை சிந்துபு சின்னீர் ஐம்படை நனைப்ப அற்றம் காவாச் சுற்றுடைப் பூந்துகில் தொடுத்தமணிக் கோவை உடுப்பொடு துயல்வரத் தளர்நடை தாங்காக் கிளர்பூண் புதல்வரைப் பொலந்தேர் மீமிசைப் புகர்முக வேழத்து இலங்குதொடி நல்லார் சிலர்நின்று ஏற்றி ஆலமர் செல்வன் மகன்விழாக் கால்கோள் காண்மி னோஎனக் கண்டுநிற் குநரும் விராடன் பேர்ஊர் விசயனாம் பேடியைக் காணிய சூழ்ந்த கம்பலை மாக்களின் மணிமே கலைதனை வந்துபுறம் சுற்றி அணியமை தோற்றத்து அருந்தவப் படுத்திய தாயோ கொடியள் தகவுஇலள் ஈங்குஇவள் மாமலர் கொய்ய மலர்வன |