மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   225
Zoom In NormalZoom Out

எமைக்
கைஉதிர்க் கோடலின் கண்நிறை நீரேம்
அறவோர் உளீரோ ஆரும்இ லோம்எனப்
புறவோர் வீதியில் புலம்பொடு சாற்ற
மங்குல்தோய் மாடம் மனைதொறும் புகூஉம்
அங்கையில் கொண்ட பாத்திரம் உடையோன்
கதிர்சுடும் அமயத்துப் பனிமதி முகத்தோன்
பொன்னில் திகழும் பொலம்பூ ஆடையன்
என்உற் றனிரோ என்றுஎமை நோக்கி
அன்புடன் அளைஇய அருள்மொழி அதனால்
அஞ்செவி நிறைத்து நெஞ்சகம் குளிர்ப்பித்துத்
தன்கைப் பாத்திரம் என்கைத் தந்துஆங்கு
எந்தைக்கு உற்ற இடும்பை நீங்க
எடுத்தனன் தழீஇக் கடுப்பத் தலைஏற்றி
மாதவர் உறைவிடம் காட்டிய மறையோன்
சாதுயர் நீக்கிய தலைவன் தவமுனி
சங்க தருமன் தான்