மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   226
Zoom In NormalZoom Out

எமக்கு அருளிய
எங்கோன் இயல்குணன் ஏதம்இல் குணப்பொருள்
உலக நோன்பின் பலகதி உணர்ந்து
தனக்குஎன வாழாப் பிறர்க்குஉரி யாளன்
இன்பச் செவ்வி மன்பதை எய்த
அருள்அறம் பூண்ட ஒருபெரும் பூட்கையின்
அறக்கதிர் ஆழிதிறப்பட உருட்டிக்
காமன் கடந்த வாமன் பாதம்
தகைபா ராட்டுதல் அல்லது யாவதும்
மிகைநா இல்லேன் வேந்தே வாழ்கென
அம்சொல் ஆயிழை நின்திறம் அறிந்தேன்
வஞ்சி நுண்இடை மணிமே கலைதனைச்
சித்திரா பதியால் சேர்தலும் உண்டுஎன்று
அப்பொழில் ஆங்குஅவன் அயர்ந்து போயபின்
பளிக்குஅறை திறந்து பனிமதி முகத்துக்
களிக்கயல் பிறழாக் காட்சியள் ஆகிக்
கற்புத் தான்இலள் நல்தவ உணர்வுஇலள்
வருணக் காப்புஇலள் பொரு