| ள்விலை யாட்டிஎன்று இகழ்ந்தனன் ஆகி நயந்தோன் என்னாது புதுவோன் பின்றைப் போனதுஎன் நெஞ்சம் இதுவோ அன்னாய் காமத்து இயற்கை இதுவே ஆயின் கெடுகதன் திறம்என மதுமலர்க் குழலாள் மணிமே கலைதான் சுதமதி தன்னொடு நின்ற எல்லையுள் இந்திர கோடணை விழாஅணி விரும்பி வந்து காண்குறூஉம் மணிமே கலாதெய்வம் பதியகத்து உறையும்ஓர் பைந்தொடி ஆகி மணிஅறைப் பீடிகை வலம்கொண்டு ஓங்கிப் புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன் உலக நோன்பின் உயர்ந்தோய் என்கோ குற்றம் கெடுத்தோய் செற்றம் செறுத்தோய் முற்ற உணர்ந்த முதல்வா என்கோ காமன் கடந்தோய் ஏமம் ஆயோய் தீநெறிக் கடும்பகை கடிந்தோய் என்கோ ஆயிர ஆரத்து ஆழியன் தி |