மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   228
Zoom In NormalZoom Out

ருந்தடி
நாஆ யிரம்இலேன் ஏத்துவது எவன்என்று
எரிமணிப் பூங்கொடி இருநில மருங்குவந்து
ஒருதனி திரிவதுஒத்து ஓதியின் ஒதுங்கி
நிலவரை இறந்துஓர் முடங்குநா நீட்டும்
புலவரை இறந்த புகார்எனும் பூங்கொடி
பன்மலர் சிறந்த நல்நீர் அகழிப்
புள்ஒலி சிறந்த தெள்அரிச் சிலம்புஅடி
ஞாயில் இஞ்சி நகைமணி மேகலை
வாயில்மருங்கு இயன்ற வான்பணைத் தோளி
தருநிலை வச்சிரம் எனஇரு கோட்டம்
எதிர்எதிர் ஓங்கிய கதிர்இள வனமுலை
ஆர்புனை வேந்தற்குப் பேரளவு இயற்றி
ஊழி எண்ணி நீடுநின்று ஓங்கிய
ஒருபெருங் கோயில் திருமுக வாட்டி
குணதிசை மருங்கில் நா