| ருந்தடி நாஆ யிரம்இலேன் ஏத்துவது எவன்என்று எரிமணிப் பூங்கொடி இருநில மருங்குவந்து ஒருதனி திரிவதுஒத்து ஓதியின் ஒதுங்கி நிலவரை இறந்துஓர் முடங்குநா நீட்டும் புலவரை இறந்த புகார்எனும் பூங்கொடி பன்மலர் சிறந்த நல்நீர் அகழிப் புள்ஒலி சிறந்த தெள்அரிச் சிலம்புஅடி ஞாயில் இஞ்சி நகைமணி மேகலை வாயில்மருங்கு இயன்ற வான்பணைத் தோளி தருநிலை வச்சிரம் எனஇரு கோட்டம் எதிர்எதிர் ஓங்கிய கதிர்இள வனமுலை ஆர்புனை வேந்தற்குப் பேரளவு இயற்றி ஊழி எண்ணி நீடுநின்று ஓங்கிய ஒருபெருங் கோயில் திருமுக வாட்டி குணதிசை மருங்கில் நா |