| ண்முதிர் மதியமும் குடதிசை மருங்கில் சென்றுவீழ் கதிரும் வெள்ளிவெண் தோட்டொடு பொன்தோ டாக எள்அறு திருமுகம் பொலியப் பெய்தலும் அன்னச் சேவல் அயர்ந்துவிளை யாடிய தன்உறு பெடையைத் தாமரை அடக்கப் பூம்பொதி சிதையக் கிழித்துப் பெடைகொண்டு ஓங்குஇருந் தெங்கின் உயர்மடல் ஏற அன்றில் பேடை அரிக்குரல் அழைஇச் சென்றுவீழ் பொழுது சேவற்கு இசைப்பப் பவளச் செங்கால் பறவைக் கானத்துக் குவளை மேய்ந்த குடக்கண் சேதா முலைபொழி தீம்பால் எழு துகள் அவிப்பக் கன்றுநினை குரல மன்றுவழிப் படர அந்தி அந்தணர் செந்தீப் பேணப் பைந்தொ |