மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   532
Zoom In NormalZoom Out

ஆக்கிய வண்ணமும்
காயசண் டிகைஎன விஞ்சைக் காஞ்சனன்
ஆயிழை தன்னை அகலாது அணுகலும்
வஞ்ச விஞ்சையன் மன்னவன் சிறுவனை
மைந்துஉடை வாளில் தப்பிய வண்ணமும்
ஐஅரி உண்கண் அவன்துயர் பொறாஅள்
தெய்வக் கிளவியில் தெளிந்த வண்ணமும்
அறைகழல் வேந்தன் ஆயிழை தன்னைச்
சிறைசெய் கென்றதும் சிறைவீடு செய்ததும்
நறுமலர்க் கோதைக்கு நல்லறம் உரைத்துஆங்கு
ஆய்வளை ஆபுத் திரன்நாடு அடைந்ததும்
ஆங்குஅவன் தன்னோடு அணியிழை போகி
ஓங்கிய மணிபல் லவத்திடை உற்றதும்
உற்றவள் ஆங்குஓர் உ