| யர்ந்தவன் வடிவாய்ப் பொன்கொடி வஞ்சியில் பொருந்திய வண்ணமும் நவைஅறு நன்பொருள் உரைமி னோஎனச் சமயக் கணக்கர் தம்திறம் கேட்டதும் ஆங்குஅத் தாயரோடு அறவணர்த் தேர்ந்து பூங்கொடி கச்சி மாநகர் புக்கதும் புக்கவள் கொண்ட பொய்உருக் களைந்து மற்றவர் பாதம் வணங்கிய வண்ணமும் தவத்திறம் பூண்டு தருமம் கேட்டுப் பவத்திறம் அறுகெனப் பாவை நோற்றதும் இளங்கோ வேந்தன் அருளிக் கேட்ப வளங்கெழு கூல வாணிகன் சாத்தன் மாவண் தமிழ்த்திறம் மணிமே கலைதுறவு ஆறைம் பாட்டினுள் அறியவைத் தனன்என். பதிகம் முற்றிற்று. |
1 |
அரியேறு......முன்னுயர்த்த வாதியான் வண்டின் புரியேறும் போதி நிழற்கீழ்ப் - பெரியோன் அடித்தா மரைமலரை யன்போடுஞ் சென்று பிடித்தார் பிறவார் பெயர்ந்து. |
2 |
பூத்தபுனற் பூம்பொய்கைப் பூம்புகார் மாதவிக்கு வாய்த்த மணிமே கலைதுறவைச் - சாத்தன் மணிமே கலை யாய் ................. உலகம் திரியா ஓங்குஉயர் விழுச்சீர்ப் பலர்புகழ் மூதூர்ப் பண்புமேம் படீஇய ஓங்குயர் மலயத்து அ |
|  |