மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   540
Zoom In NormalZoom Out

கை
நல்தவம் புரிந்தது நாண்உடைத்து என்றே
அலகுஇல் மூதூர் ஆன்றவர் அல்லது
பலர்தொகுபு உரைக்கும் பண்புஇல் வாய்மொழி
நயம்பாடு இல்லை நாண்உடைத்து என்ற
வயந்த மாலைக்கு மாதவி உரைக்கும்:
காதலன் உற்ற கடுந்துயர் கேட்டுப்
போதல் செய்யா உயிரொடு நின்றே
பொன்கொடி மூதூர்ப் பொருள்உரை இழந்து
நல்தொடி நங்காய் நாணுத் துறந்தேன்
காதலர் இறப்பின் கனைஎரி பொத்தி
ஊதுஉலைக் குருகின் உயிர்த்துஅகத்து அடங்காது
இன்உயிர் ஈவர்; ஈயார் ஆயின்
நல்நீர்ப் பொய்கையின் நளிஎரி புகுவர்
நளிஎரி புகாஅர் ஆயின் அன்பரோடு
உடன்உறை வாழ்க்கைக்கு நோற்றுஉடம்பு அடுவர்
பத்தினிப் பெண்டிர் பரப்புநீர் ஞாலத்து
அத்திறத் தாளும் அல்லள்எம் ஆயிழை
கணவற்கு உற்ற கடுந்துயர் பொறாஅள்