| மணிமே கலைமுகம் நோக்கித் தாமரை தண்மதி சேர்ந்தது போலக் காமர் செங்கையில் கண்ணீர் மாற்றித் தூநீர் மாலை தூத்தகை இழந்தது நிகர்மலர் நீயே கொணர்வாய் என்றலும் மதுமலர்க் குழலியொடு மாமலர் தொடுக்கும் சுதமதி கேட்டுத் துயரொடும் கூறும் குரவர்க்கு உற்ற கொடுந்துயர் கேட்டுத் தணியாத் துன்பம் தலைத்தலை எய்தும் மணிமேக கலைதன் மதிமுகம் தன்னுள் அணிதிகழ் நீலத்து ஆய்மலர் ஓட்டிய கடைமணி உகுநீர் கண்டனன் ஆயின் படையிட்டு நடுங்கும் காமன் பாவையை ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ பேடியர் அன்றோ பெற்றியின் நின்றிடின் ஆங்ஙனம் அன்றியும் அணியிழை கேளாய் ஈங்குஇந் நகரத்து யான்வருங் காரணம் பாரா வாரம் |