மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   543
Zoom In NormalZoom Out

மணிமே கலைமுகம் நோக்கித்
தாமரை தண்மதி சேர்ந்தது போலக்
காமர் செங்கையில் கண்ணீர் மாற்றித்
தூநீர் மாலை தூத்தகை இழந்தது
நிகர்மலர் நீயே கொணர்வாய் என்றலும்
மதுமலர்க் குழலியொடு மாமலர் தொடுக்கும்
சுதமதி கேட்டுத் துயரொடும் கூறும்
குரவர்க்கு உற்ற கொடுந்துயர் கேட்டுத்
தணியாத் துன்பம் தலைத்தலை எய்தும்
மணிமேக கலைதன் மதிமுகம் தன்னுள்
அணிதிகழ் நீலத்து ஆய்மலர் ஓட்டிய
கடைமணி உகுநீர் கண்டனன் ஆயின்
படையிட்டு நடுங்கும் காமன் பாவையை
ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ
பேடியர் அன்றோ பெற்றியின் நின்றிடின்
ஆங்ஙனம் அன்றியும் அணியிழை கேளாய்
ஈங்குஇந் நகரத்து யான்வருங் காரணம்
பாரா வாரம்