| செல்லும் செம்மை தான்இலள் மணிமே கலையொடு மாமலர் கொய்ய அணியிழை நல்லாய் யானும் போவல்என்று அணிப்பூங் கொம்பர் அவளொடும் கூடி மணித்தேர் வீதியில் சுதமதி செல்வுழீஇச் சிமிலிக் கரண்டையன் நுழைகோல் பிரம்பினன் தவல்அருஞ் சிறப்பின் அராந்தா ணத்துஉளோன் நாணமும் உடையும் நன்கனம் நீத்துக் காணா உயிர்க்கும் கையற்று ஏங்கி உண்ணா நோன்போடு உயவல் யானையின் மண்ணா மேனியன் வருவோன் தன்னை வந்தீர் அடிகள்நும் மலர்அடி தொழுதேன் எந்தம் அடிகள் எம்உரை கேண்மோ அழுக்குஉடை யாக்கையில் புகுந்த நும்உயிர் புழுக்கறைப் பட்டோர் போன்றுஉளம் வருந்தாது இம்மையும் மறுமையும் இறுதிஇல் இன்பமும் தன்வயின் தரூஉம்என் தலைமகன் உரைத்தது கொலையும் உண்டோ கொ |