மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   548
Zoom In NormalZoom Out

ழுமடல் தெங்கின்
விளைபூந் தேறலின் மெய்த்தவத் தீரே
உண்டு தெளிந்துஇவ் யோகத்து உறுபயன்
கண்டால் எம்மையும் கையுதிர்க் கொண்ம்என
உண்ணா நோன்பி தன்னொடும் சூள்உற்று
உண்ம்என இரக்கும்ஓர் களிமகன் பின்னரும்
கணவிரி மாலையில் கட்டிய திரள்புயன்
குவிமுகிழ் எருக்கில் கோத்த மாலையன்
சிதவல் துணியொடு சேண்ஓங்கு நெடுஞ்சினைத்
ததர்வீழ்பு ஒடித்துக் கட்டிய உடையினன்
வெண்பலி சாந்தம் மெய்ம்முழுது உரீஇப்
பண்புஇல் கிளவி பலரொடும் உரைத்தாங்கு
அழூஉம் விழூஉம் அரற்றும் கூஉம்
தொழூஉம் எழூஉம் சுழலலும் சுழலும்
ஓடலும் ஓடும் ஒருசிறை ஒதுங்கி
நீடலும் நீடும் நிழலொடு மறலும்
மையல் உற்ற மகன்பின் வருந்திக்
கையறு துன்பம் கண்டுநிற் குநரும்