| னம் ஆங்குஇனிது இருப்பக் கரைநின்று ஆலும் ஒருமயில் தனக்குக் கம்புள் சேவல் கனைகுரல் முழவாக் கொம்பர் இருங்குயில் விளிப்பது காணாய் இயங்குதேர் வீதி எழுதுகள் சேர்ந்து வயங்குஒளி மழுங்கிய மாதர்நின் முகம்போல விரைமலர்த் தாமரை கரைநின்று ஓங்கிய கோடுஉடைத் தாழைக் கொழுமடல் அவிழ்ந்த வால்வெண் சுண்ணம் ஆடியது இதுகாண் மாதர் நின்கண் போதுஎனச் சேர்ந்து தாதுஉண் வண்டுஇனம் மீதுகடி செங்கையின் அம்சிறை விரிய அலர்ந்த தாமரைச் செங்கயல் பாய்ந்து பிறழ்வன கண்டுஆங்கு எறிந்துஅது பெறாஅது இரைஇழந்து வருந்தி மறிந்து நீங்கு மணிச்சிரல் காண்எனப் பொழிலும் பொய்கையும் சுதமதி காட்ட மணிமே கலைஅம் மலர்வன |