| ம் காண்புழி மதிமருள் வெண்குடை மன்னவன் சிறுவன் உதய குமரன் உருகெழு மீதூர் நீயான் நடுங்க நடுவுநின்று ஓங்கிய கூம்புமுதல் முறிய வீங்குபிணி அவிழ்ந்து கயிறுகால் பரிய வயிறுபாழ் பட்டாங்கு இதைசிதைந்து ஆர்ப்பத் திரைபொரு முந்நீர் இயங்குதிசை அறியாது யாங்கணும் ஓடி மயங்குகால் எடுத்த வங்கம் போலக் காழோர் கையற மேலோர் இன்றிப் பாகின் பிளவையிற் பணைமுகம் துடைத்துக் கோவியன் வீதியும் கொடித்தேர் வீதியும் பீடிகைத் தெருவும் பெருங்கலக்கு உறுத்துஆங்கு இருபால் பெயரிய உருகெழு மூதூர் ஒருபால் படாஅது ஒருவழித் தங்காது பாகும் பறையும் பருந்தின் பந்தரும் ஆதுல மாக்களும் அலவுற்று விளிப்ப நீல மால்வரை நிலனொடு படர்ந் |