மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   566
Zoom In NormalZoom Out

கோடணை விழாஅணி விரும்பி
வந்து காண்குறூஉம் மணிமே கலாதெய்வம்
பதியகத்து உறையும்ஓர் பைந்தொடி ஆகி
மணிஅறைப் பீடிகை வலம்கொண்டு ஓங்கிப்
புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன்
உலக நோன்பின் உயர்ந்தோய் என்கோ
குற்றம் கெடுத்தோய் செற்றம் செறுத்தோய்
முற்ற உணர்ந்த முதல்வா என்கோ
காமன் கடந்தோய் ஏமம் ஆயோய்
தீநெறிக் கடும்பகை கடிந்தோய் என்கோ
ஆயிர ஆரத்து ஆழியன் திருந்தடி
நாஆ யிரம்இலேன் ஏத்துவது எவன்என்று
எரிமணிப் பூங்கொடி இருநில மருங்குவந்து
ஒருதனி திரிவதுஒத்து ஓதியின் ஒதுங்கி
நிலவரை இறந்துஓர் முடங்குநா நீட்டும்
புலவரை இறந்த புகார்எனும் பூங்கொடி
பன்மலர் சிறந்த நல்நீர் அகழிப்