| புள்ஒலி சிறந்த தெள்அரிச் சிலம்புஅடி ஞாயில் இஞ்சி நகைமணி மேகலை வாயில்மருங்கு இயன்ற வான்பணைத் தோளி தருநிலை வச்சிரம் எனஇரு கோட்டம் எதிர்எதிர் ஓங்கிய கதிர்இள வனமுலை ஆர்புனை வேந்தற்குப் பேரளவு இயற்றி ஊழி எண்ணி நீடுநின்று ஓங்கிய ஒருபெருங் கோயில் திருமுக வாட்டி குணதிசை மருங்கில் நாண்முதிர் மதியமும் குடதிசை மருங்கில் சென்றுவீழ் கதிரும் வெள்ளிவெண் தோட்டொடு பொன்தோ டாக எள்அறு திருமுகம் பொலியப் பெய்தலும் அன்னச் சேவல் அயர்ந்துவிளை யாடிய தன்உறு பெடையைத் தாமரை அடக்கப் பூம்பொதி சிதையக் கிழித்துப் பெடைகொண்டு ஓங்குஇருந் தெங்கின் உயர்மடல் ஏற அன்றில் பேடை அரி |