| அந்தி மாலை நீங்கிய பின்னர் வந்து தோன்றிய மலர்கதிர் மண்டிலம் சான்றோர் தங்கண் எய்திய குற்றம் தோன்றுவழி விளங்கும் தோற்றம் போல மாசுஅறு விசும்பில் மறுநிறம் கிளர ஆசுஅற விளங்கிய அம்தீம் தண்கதிர் வெள்ளிவெண் குடத்துப் பால்சொரி வதுபோல் கள்அவிழ் பூம்பொழில் இடைஇடைச் சொரிய உருவு கொண்ட மின்னே போலத் திருவில் இட்டுத் திகழ்தரு மேனியள் ஆதி முதல்வன் அறவாழி ஆள்வோன் பாத பீடிகை பணிந்தனள் ஏத்திப் பதியகத்து உறையும்ஓர் பைந்தொடி ஆகிச் சுதமதி நல்லாள் தன்மதிமுகம் நோக்கி ஈங்கு நின்றீர் என்உற் றீர்என ஆங்குஅவள் ஆங்குஅவன் கூறியது உரைத்தலும் அரசிளங் குமரன் ஆயிழை தன்மேல் தணியா நோக்கம் தவிர்ந்திலன் ஆகி அறத்தோர் வனம்என்று அகன்ற |