| றனன் ஆயினும் புறத்தோர் வீதியில் பொருந்துதல் ஒழியான் பெருந்தெரு ஒழித்துஇப் பெருவனம் சூழ்ந்த திருந்துஎயில் குடபால் சிறுபுழை போகி மிக்க மாதவர் விரும்பினர் உறையும் சக்கர வாளக் கோட்டம் புக்கால் கங்குல் கழியினும் கடுநவை எய்தாது அங்குநீர் போம்என்று அருந்தெய்வம் உரைப்ப வஞ்ச விஞ்சையன் மாருத வேகனும் அம்செஞ் சாயல் நீயும் அல்லது நெடுநகர் மருங்கின் உள்ளோர் எல்லாம் சுடுகாட்டுக் கோட்டம் என்றுஅலது உரையார் சக்கர வாளக் கோட்டம் அஃதுஎன மிக்கோய் கூறிய உரைப்பொருள் அறியேன் ஈங்குஇதன் காரணம் என்னை யோஎன ஆங்குஅதன் காரணம் அறியக் கூறுவன் மாதவி மகளொடு வல்இருள் வரினும் நீகேள் என்றே நேர்இழை கூறு |