| ஒருங்குஉடன் மாய்ந்த பெண்டிர்க்கு ஆயினும் நால்வேறு வருணப் பால்வேறு காட்டி இறந்தோர் மருங்கில் சிறந்தோர் செய்த குறியவும் நெடியவும் குன்றுகண் டன்ன சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டமும் அருந்திறல் கடவுள் திருந்துபலிக் கந்தமும் நிறைக்கல் தெற்றியும் மிறைக்களச் சந்தியும் தண்டும் மண்டையும் பிடித்துக் காவலர் உண்டுகண் படுக்கும் உறையுள் குடிகையும் தூமக் கொடியும் சுடர்த்தோ ரணங்களும் ஈமப் பந்தரும் யாங்கணும் பரந்து சுடுவோர் இடுவோர் தொடுகுழிப் படுப்போர் தாழ்வயின் அடைப்போர் தாழியில் கவிப்போர் இரவும் பகலும் இளிவுடன் தரியாது வருவோர் பெயர்வோர் மாறாச் சும்மையும் எஞ்சியோர் மருங்கின் ஈமம் சாற்றி நெஞ்சு நடுக்குறூஉம் நெய்தல் ஓ |