| ப் படுக்கும் இரத்தி மன்றமும் பிணம்தின் மாக்கள் நிணம்படு குழிசியில் விருந்தாட்டு அயரும் வெள்ளிடை மன்றமும் அழல்பெய் குழிசியும் புழல்பெய் மண்டையும் வெள்ளில் பாடையும் உள்ளீட்டு் அறுவையும் பரிந்த மாலையும் உடைந்த கும்பமும் நெல்லும் பொரியும் சிம்பலி அரிசியும் யாங்கணும் பரந்த ஓங்குஇரும் பறந்தலை தவத்துறை மாக்கள் மிகப்பெருஞ் செல்வர் ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர் முதியோர் என்னான் இளையோர் என்னான் கொடுந்தொழி லாளன் கொன்றனன் குவிப்பஇவ் அழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும் கழிபெருஞ் செல்வக் கள்ளாட்டு அயர்ந்து மிக்க நல்லறம் விரும்பாது வாழும் மக்களில் சிறந்த மடவோர் உண்டோ? ஆங்குஅது தன்னைஓர் அருங்கடி நகர்எனச் சார்ங்கல் |