மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   575
Zoom In NormalZoom Out

என்போன் தனிவழிச் சென்றோன்
என்பும் தடியும் உதிரமும் யாக்கைஎன்று
அன்புறு மாக்கட்கு அறியச் சாற்றி
வழுவொடு கிடந்த புழுஊன் பிண்டத்து
அலத்தகம் ஊட்டிய அடிநரி வாய்க்கொண்டு
உலப்புஇல் இன்பமோடு உளைக்கும் ஓதையும்
கலைப்புற அல்குல் கழுகுகுடைந்து உண்டு
நிலைத்தலை நெடுவிளி எடுக்கும் ஓதையும்
கடகம் செறிந்த கையைத் தீநாய்
உடையக் கவ்வி ஒடுங்கா ஓதையும்
சாந்தம் தோய்ந்த ஏந்துஇள வனமுலை
காய்ந்தபசி எருவை கவர்ந்துஊண் ஓதையும்
பண்புகொள் யாக்கையின் வெண்பலி அரங்கத்து
மண்கணை முழவம் ஆக ஆங்குஓர்
கருந்தலை வாங்கிக் கையகத்து ஏந்தி
இரும்பேர் உவகையின் எழுந்துஓர் பேய்மகள்
புயலோ குழலோ கயலோ கண்ணோ