மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   771
Zoom In NormalZoom Out

மையில் கொண்ட
பான்மையில் தனாது பாண்டு கம்பளம்
தான்நடுக்கு உற்ற தன்மை நோக்கி
ஆதி முதல்வன் போதி மூலத்து
நாதன் ஆவோன் நளிநீர்ப் பரப்பின்
எவ்வம்உற் றான்தனது எவ்வம் தீர்எனப்
பவ்வத்து எடுத்துப் பாரமிதை முற்றவும்
அறஅரசு ஆளவும் அறவாழி உருட்டவும்
பிறவிதோறு உதவும் பெற்றியள் என்றே
சாரணர் அறிந்தோர் காரணம் கூற
அந்த உதவிக்கு ஆங்குஅவள் பெயரைத்
தந்தைஇட் டனன்நினைத் தையல்நின் துறவியும்
அன்றே கனவின் நனவுஎன அறைந்த
மென்பூ மேனிமணி மேகலா தெய்வம்
என்பவட்கு ஒப்ப அவன்இடு சாபத்து
நகர்கடல் கொள்ளநின் தாயரும் யானும்
பகரும்நின் பொருட்டால் இப்பதிப் படர்ந்தனம்
என்றலும் அறவணன் தாள்இணை இறைஞ்சிப்
பொன்திகழ் புத்த பீடிகை போற்றும்
தீவ திலகையும் இத்திறம் செப்பினள்
ஆதலின் அன்ன அணிநகர்