| மருங்கே வேற்றுஉருக் கொண்டு வெவ்வேறு உரைக்கும் நூல்துறைச் சமய நுண்பொருள் கேட்டே அவ்வுரு என்ன ஐவகைச் சமயமும் செவ்விது அன்மையின் சிந்தையின் வைத்திலேன் அடிகள் மெய்ப்பொருள் அருளுக என்ன நொடிகுவென் நங்காய் நுண்ணிதின் கேள்நீ ஆதி சினேந்திரன் அளவை இரண்டே ஏதம்இல் பிரத்தியம் கருத்துஅளவு என்னச் சுட்டுணர் வைப்பிரத் தியக்கம் எனச்சொலி விட்டனர் நாம சாதிகுணக் கிரியைகள் மற்றவை அனுமா னத்தும்அடை யும்எனக் காரிய காரண சாமா னியக்கருத்து ஓரின் பிழைக்கையும் உண்டுபிழை யாதது கனலில் புகைபோல் காரியக் கருத்தே ஏனை அளவைகள் எல்லாம் கருத்தினில் ஆன முறைமையின் அனுமான மாம்பிற பக்கம் ஏதுத் திட்டாந்தம் உபநயம் நிகமனம் என்ன ஐந்துஉள அவற் |