மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   782
Zoom In NormalZoom Out

கா திகளில்
சுகத்து நிகழ்ந்து கடத்துஒழிந் தமையினும்
ஏகதே சத்து நிகழ்வதுஏ காந்தம்அன்று
அமூர்த்தம் ஆகாசம் போல நித்தமோ
அமூர்த்த சுகம்போல் அநித்த மோஎனல்
விருத்த வியபிசாரி திருந்தா ஏதுவாய்
விருத்த ஏதுவிற் கும்இடம் கொடுத்தல்
சத்தம் அநித்தம் செயல்இடைத் தோன்றலின்
ஒத்த தெனினச் செயலிடைத் தோன்றற்குச்
சபக்கமாய் உள்ள கடாதி நிற்கச்
சத்தம் நித்தம் கேட்கப் படுதலில்
சத்தத் துவம்போல் எனச்சாற் றிடுதல்
இரண்டினும் சங்கயமாய் ஏகாந்தம் அல்ல
விருத்தம் தன்னைத் திருத்தக விளம்பில்
தன்மச் சொரூப விபரீத சாதனம்
தன்ம விசேட விபரீத சாதனம்
தன்மிச் சொரூப விபரீத சாதனம்
தன்மி விசேட விபரீத சாதனம்
என்ன நான்கு வகையது ஆகும்அத்
தன்மச் சொரூப விபரீத சாதனம்
சொன்ன ஏதுவில் சாத்திய தன்மத்து
உருவம் கெடுதல் சத்தம் நித்தம்
பண்ணப் படுதலின் என்றால் பண்ணப்
படுவ