மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   789
Zoom In NormalZoom Out

ன்று நித்தம் அன்று அஃது
அமூர்த்தமும் அன்று கன்மம்போல் என்றால்
வைதன் மியதிட் டாந்த மாகக்
காட்டப் பட்ட கன்மம்
அமூர்த்தமாய் நின்றே அநித்தம் ஆதலின்
சாத்திய மான நித்தியம் மீண்டு
சாதன மான அமூர்த்தம் மீளாது
உபயாவி யாவிருத்தி காட்டப் பட்ட
வைதன் மியதிட் டாந்தத்தி னின்று
சாதன சாத்தியங்கள் மீளாமை அன்றியும்
உண்மையின் உபயா வியாவி ருத்தி
இன்மையின் உபயா வியாவி ருத்தி
எனஇரு வகை உண்மையின்
உபயாவி யாவிருத்தி உள்ள பொருள்கண்
சாத்திய சாதனம் மீளா தபடி
வைதன் மியதிட் டாந்தம் காட்டல்
சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலின்
என்றாற்கு யாதொன்று யாதொன்று நித்தம்அன்று
அமூர்த்தமும் அன்றுஆ காசம்போல் என்றால்
வைதன்மிய திட்டாந்த மாகக் காட்டப்பட்ட
ஆகா சம்பொருள் என்பாற்கு
ஆகாசம்