மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   790
Zoom In NormalZoom Out

 
 
நித்தமும் அமூர்த்தமும் ஆதலான்
சாத்திய நித்தமும் சாதனமா உள்ள
அமூர்த்தமும் இரண்டும் மீண்டில இன்மையின்
உபயாவி யாவிருத்தி யாவது
சத்தம் அநித்தம் மூர்த்தம் ஆதலான்
என்றஇடத்து யாதொன்று யாதொன்று அநித்தம்
மூர்த்தமும் அன்றுஆ காசம் போல்என
வைதன் மியதிட் டாந்தம் காட்டில்
ஆகா சம்பொருள் அல்லஎன் பானுக்கு
ஆகாசந் தானே உண்மையின் மையினால்
சாத்திய அநித்தமும் சாதன மூர்த்தமும்
மீட்சியும் மீளா மையும்இலை யாகும்
அவ்வெதி ரேகம் ஆவது சாத்தியம்
இல்லா விடத்துச் சாதனம் இன்மை
சொல்லாதே விடுதல் ஆகும் சத்தம்
நித்தம் பண்ணப் படாமையால் என்றால்
யாதொன்று யாதொன்று நித்தம் அன்று
பண்ணப் படுவது அல்லா ததுவும்
அன்றுஎனும் இவ்வெதி ரேகம் தெரியச்
சொல்லாது குடத்தின் கண்ணே பண்ணப்
படுதலும் அநித்தமும் கண்டேம் ஆத