மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   793
Zoom In NormalZoom Out

க்கின் மூன்று வகையாய்த்
தோற்றற்கு ஏற்ற காலம்மூன்று உடைத்தாய்க்
குற்றமும் வினையும் பயனும் விளைந்து
நிலையில வறிய துன்பம்என நோக்க
உலையா வீட்டிற்கு உறுதி யாகி
நால்வகை வாய்மைக்குச் சார்பிடன் ஆகி
ஐந்துவகைக் கந்தத்து அமைதி ஆகி
மெய்வகை ஆறு வழக்குமுகம் எய்தி
நயங்கள் நான்கால் பயன்கள் எய்தி
இயன்றநால் வகையால் வினாவிடை உடைத்தாய்
நின்மதி இன்றி உழ்பாடு இன்றிப்
பின்போக் கல்லது பொன்றக் கெடாதாய்ப்
பண்ணுநர் இன்றிப் பண்ணப் படாதாய்
யானும் இன்றி என்னதும் இன்றிப்
போனதும் இன்றி வந்ததும் இன்றி
முடித்தலும் இன்றி முடிவும் இன்றி
வினையும் பயனும் பி