| ம் வீடும் இனையன எல்லாம் தானே ஆகிய பேதைமை செய்கை உணர்வே அருவுரு வாயில் ஊறே நுகர்வே வேட்கை பற்றே பவமே தோற்றம் வினைப்பயன் இற்றுஎன வகுத்த இயல்புஈ ராறும் பிறந்தோர் அறியின் பெரும்பேறு அறிகுவர் அறியார் ஆயின் ஆழ்நரகு அறிகுவர் பேதைமை என்பது யாதுஎன வினவின் ஓதிய இவற்றை உணராது மயங்கி இயற்படு பொருளால் கண்டது மறந்து முயல்கோடு உண்டுஎனக் கேட்டது தெளிதல் உலகம் மூன்றினும் உயிராம் உலகம் அலகில பல்உயிர் அறுவகைத்து ஆகும் மக்களும் தேவரும் பிரமரும் நரகரும் தொக்க விலங்கும் பேயும் என்றே நல்வினை தீவினை என்றுஇரு வகையால் சொல்லப் பட்ட கருவில் சார்தலும் கருவில் பட்ட பொழு |