மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   797
Zoom In NormalZoom Out

தருமுறை இதுஎனத் தாம்தாம் சார்தல்
பிறப்புஎனப் படுவதுஅக் கருமப் பெற்றியின்
உறப்புணர் உள்ளம் சார்பொடு கதிகளில்
காரண காரிய உருக்களில் தோன்றல்
பிணிஎனப் படுவது சார்பில் பிறிதாய்
இயற்கையின் திரிந்துஉடம்பு இடும்பை புரிதல்
மூப்புஎன மொழிவது அந்தத்து அளவும்
தாக்குநிலை யாமையின் தாம்தளர்ந் திடுதல்
சாக்காடு என்பது அருவுருத் தன்மை
யாக்கை வீழ்கதிர் எனமறைந் திடுதல்
பேதைமை சார்வாச் செய்கை ஆகும்
செய்கை சார்வா உணர்ச்சி ஆகும்
உணர்ச்சி சா