தழுவோள் பெண்ணிலி கொல்லோ பெரியோர்ப் பிழைப்பதோர் கண்ணிலி யாகுமிக் கணிகை மகளெனக் கூத்தி மருங்கிற் குணம்பழிப் போரும் ஆற்றற் கொற்றமொ டரசுவழி வந்ததன் காத்துயர் தொல்குடிக் கதுவா யாகப் பண்பில் சிறுதொழில் பயின்றதை யன்றியும் தன்னொடு படாளைத் தானயந் தரற்றிக் கண்ணற் றனனாற் காவலன் மகனென அண்ணன் மருங்கி னறிவிழிப் போரும் எள்ளியு மிழித்து மின்னவை பயிற்றி முள்ளெயி றிலங்கு மொள்ளமர் முறுவலர் பட்டி மாக்கள் கட்டுரை பகரும் பெருங்கலி யாவணம் பிற்படப் போஒம் வையத் தவளொடும் வயந்தகன் கேட்பத் தேன்கவர் வோப்பித் திருநுதல் சுருக்கிப் பூநறுந் தேறல் பொலன்வள்ளத் தேந்தி ஒழுகி நிலம்பெறாஅ தொசிந்து கடைபுடைத் தெழுதுநுண் புருவ மேற்றி யியைவித் திலமலர்ச் செவ்வா யொப்ப விதழ்விடுத்து நரம்பிசை தள்ளி வறிதினிற் சுவைத்து மகிழின் மம்ம ரெய்தி முகிழின் கால மன்றியுங் கையி னெரித்த கழுநீர்க் குவளைப் பெரும்பொதி யவிழ்ந்த வள்ளிதழ் வகைய வாகி யொள்ளிதழ் செஞ்சிவப் புறுத்த சிதரரி மழைக்கண் கொழுங்கடை யிடுக நோக்கி மணிபிறழ விருப்புள் கூர விம்மி வெய்துயிர்த் தெருத்தஞ் சிறிய கோட்டி யெம்மினும் திருத்தஞ் சான்றநுந் துணைவியில் செல்கெனப் புலவித் தண்டந் தமர்வயி னேற்றி இல்லை யாயினுஞ் சொல்வகை செருக்கித் தண்டிக் கொண்டு பெண்டிரைப் பொறாது செயிர்வுள் ளுறுத்த நோக்கமொடு நறவின் வாசங் கமழு மோசைய வாகிக் கிளிப்பயி ரன்ன களிப்பயின் மழலை எய்தா வொழுக்கமொ டைதவட் பயிற்றி எயிறு வெளிப்படா திறைஞ்சி ஞிமிறினம் மூசின கரிய கோதையிற் புடைத்துப் பூங்குழை

|