மகளிர் புலவிகொ டிருமுகம் தேர்ந்துணர் காட்சியிற் றிரிந்துநலங் கரியப் பூந்துகிற் றானை பற்றிக் காய்ந்தது காட்டினை சென்மோ மீட்டின தெளிகெனப் படிற்றியல் களைஇப் பணிமொழிக் கிளவி நடுக்குறு துயரமொடு நயவரப் பயிற்றிக் குவிப்பூங் கையிணை கூப்பித் திருக்குழல் நானப் பங்கி கரமிசைத் திவளப் பரட்டசை கிண்கிணிப் பக்கம் புல்லி அரத்தகத் தீரத் தைதுகொண் டெழுதிய சீறடிச் சுவட்டெழுத் தேறிய சென்னியர் நாட்போது நயந்த வேட்கைய வாயினும் முகைப்பதம் பார்க்கும் வண்டினம் போலத் தகைப்பருங் காமத்துத் தாம்வீழ் மகளிர் நகைப்பதம் பார்க்கு நனிநா கரிகத்துச் சொல்லி னுண்பொருள் காட்டி யில்லின் படுகாழ்ப் படுத்துத் தேய்வை யுறீஇக் கலுழி நீக்குங் கம்மியர் போல மகர வீணையின் மனமாசு கழீஇ நகர நம்பியர் திரிதரு மறுகின் ஆணையிற் கொண்டுதன் னரசியல் செய்தோன் காம விருந்தினன் கலையிற் கிகந்தனன் பிழைக்கவும் பெறூஉம் பெண்டிர் மாட்டென உரைத்தகு கிளவி யோம்பார் பயிற்றி நடநவின் மகளிர் நலத்திடை நம்பி விருந்தினன் போன்மெனப் புரிந்தலர் தூற்றி விடருந் தூர்த்தரும் விட்டே றுரைப்பத் தரும நுவலாது தத்துவ மொரீஇக் கரும நுதலிய கள்ளக் காமம் எத்துறை மாக்களு மெய்க்கொளப் பரப்பி வனப்பு மிளமையும் வரம்பில் கல்வியும் தனக்குநிக ரில்லாத் தன்மைய னாதலிற் பொருந்தாப் புறஞ்சொ னிறம்பார்த் தெறிய வான்மயிர் துடக்கிற் றானுயிர் வாழாப் பெருந்தகைக் கவரி யன்ன பீடழிந்து நெடுவெண் ணிலவி னீர்மைக் கிரங்கி முறுவன் மகளிர் முற்ற நிற்பப் பசுங்கதிர் சுருங்கிய பசலைத் தாகி விசும்பெழத் தேயும் வெண்மதி

|