போல வலியிற் றீரா தொளியிற் குன்றிப் பெருநல் கூர்ந்த பெருவரை யகலத் தெவ்வ மறைத்தல் வேண்டி வையத்து வலிதிற் றந்த வால்வளைப் பணைத்தோள் ஒருமனம் புரிந்த நருமதை கேட்ப வேட்கைக் கிளவி வெளிப்படப் பயிற்றிச் சேட்படு குருசில் சேர்தொறும் பொறாஅள் நச்சுயிர்ப் பளைஇய நாகம் போல அச்சுயிர்ப் பளைஇ யமரா நோக்கமொடு சில்லைச் சிறுசொன் மெல்லியன் மிழற்ற அவ்விரு ளடக்கி வைகிருட் போக்கிப் போற்றா மாக்க டூற்றும் பெரும்பழி மேற்கொண் டனனான் மின்னிழை பொருட்டென் மின்னிழை பொருட்டா மேலவன் கொண்ட துன்னரும் பெரும்பழி நன்னகர் கழுமக் கம்பலை மூதூர் வம்பல ரெடுத்த படுசொ லொற்றர் கடிதவ ணோடி வானுற நிவந்த வசையின் மாணகர்த் தாம்பெறு செவ்வியுட் டலைமகற் குணர்த்தக் காமத் தியற்கை காழ்ப்பட லுணர்ந்து நகையு நாணுந் தொகவொருங் கெய்தி இழிப்புறு நெஞ்சின னாயினும் யார்கணும் பழிப்புறஞ் சொல்லாப் பண்பின னாதலின் உருவுவழி நில்லா தாயினு மொருவர்க்குத் திருவுவழி நிற்குந் திட்ப மாதலிற் கேட்டது கரந்து வேட்டது பெருக்கிப் பட்டது நாணாது பெட்டது மலையும் கால மன்மை யல்லது காணிற் கோல மன்றோ குமரற் கிதுவென எள்ளியு முரையா னிளமைய தியல்பென முள்ளெயி றிலங்கு முறுவல னாகித் தண்கய மருங்கிற் றாமரை போல அண்ணன் மூதூர்க் கணியெனத் தோன்றிச் சாமரை யிரட்டையுந் தமனியக் குடையும் மாமணி யடைப்பையு மருப்பிய லூர்தியும் பைந்தொடி யாயமும் பட்டமு முடையோர் ஐம்பதி னாயிர ரரங்கியன் மகளிருள் மன்னருட் பிறந்த

|