மக்களு ளருங்கலம் தன்னயந் தரற்றத் தன்கடன் றீர்த்த தகைசா லரிவைக்குத் தக்கன விவையென இசைசால் சிறப்பி னிருங்கலப் பேழையொடு மணியினும் பொன்னினு மருப்பினு மல்லது மரத்தி னியலாத் திருத்தகு வையம் முத்த மாலை முகமிசை யணிந்து பொற்றார் புனைந்த புள்ளியற் பாண்டில் கடைமணை பூட்டிக் கணிகையில் விட்டுப் பொய்தன் மகளிரொடு புனலாட் டயரினும் தெய்வ விழவொடு தேர்ப்பி னியலினும் நகர்கடந் திறத்த னருமதை பெறாளென எயின்மூ தாளரை வயின்வயி னேஎய் வாயில் சுட்டி வளநக ரறியக் கோயிற் கூத்துங் கொடுங்குழை யொழிகெனத் தொன்றிய லவையத்து நன்றவட் கருளித் தருமணற் பந்தர்த் தான்செயற் கொத்த கரும மறுத்த கைதூ வமையத் திருநிலத் திறைமை யேயர் பெருமகன் பெருங்களி றடக்கிய பெறற்கரும் பேரியாழ் கல்லா நின்றனள் கனங்குழை யோளென எல்லா வேந்தரு மிசையின் விரும்பி வழிமொழிக் கிளவியொடு வணக்கஞ் சொல்லிக் கழிபெரு நன்கலங் களிற்றின்மிசை யுயரித் துன்னருங் கோயிலுட் டூதரை விடுத்தர ஓலையுட் பொருளு முரைத்த மாற்றமும் நூலிய லாளரொடு நுண்ணிதிற் கேட்டு நன்று மென்னா னன்றென மறாஅன் மரனிவர் குரங்கின் மகக்கோட் போல நிலைமையொடு தெரிதரு நீதிய னாகி ஆவது துணிதுணை யாசையி னிறீஇத் தார்கெழு வேந்தன் றமர்களை விடுத்தபின் கோமகன் குறித்தது கொண்டுகை புனைந்து தாய்மகட் டேரிய தன்வயி னுரைக்க நொதுமதற் கிளவி கதுமென வெரீஇப் புதுமரப் பாவை பொறியற் றாங்கு விதுப்புறு நடுக்கமொடு விம்முவன ளாகி இதுமெய் யாயி னின்னுயிர் வேண்டி வாழ்வோ ருளரெனிற் சூழ்கதன் வினையென ஆவி நுண்டுகில் யாப்புறுத் தாயினும் சாவ துறுதியான் றப்பிய பின்றை என்பிற் றீர்க வெந்தைதன் குறையென அன்பிற் கொண்ட வரற்றுறு கிளவி வளைக்கை நெருக்கி வாய்மிக்

|