பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   26
Zoom In NormalZoom Out


 

கெழுதரக்
கதிர்முத் தாரங் கழிவன போலச்
சிதர்முத் தாலி சிதறிய கண்ணள்
மாழ்குபு கலிழு மகள்வயிற் றழீஇ
வீழ்தரு கண்ணீர் விரலி னீக்கிக்
கவாஅற் கொண்டு காரணங் காட்டி
அழேற்கென் பாவா யதுவு முண்டோ
யாயு நீயும் யானு மெல்லாம்
இதுமுத லாக விவ்வகை நிகழிற்
றலைமகற் றுறந்து தவம்புரி வேமென
அஞ்சி லோதியை நெஞ்சு வலியுறீஇச்
சேயுய ருலகஞ் செம்மையிற் கூறும்
தீதறு நோன்பிற் றெய்வந் தேற்றிய
தீம்பாற் காட்சித் தெரிவுபல காட்டி
மாற்றாக் கவலையின் மனங்கொண் டாங்கு
நிறைமை சான்றநின் னெஞ்சங் கொண்ட
பொறைமை காணிய பொய்யுரைத் தேனென
ஓதிய நுதலு மாதரை நீவித்
தக்கது நோக்கான் பெற்றது விரும்பி
நுந்தை நேரா நெஞ்சுகொள் காரணம்
பைந்தொடித் தோளி பரிவறக் கேளென
இளமையும் வனப்பு மில்லொடு வரவும்
வளமையுந் தறுகணும் வரம்பில் கல்வியும்
தேசத் தமைதியு மாசில் சூழ்ச்சியோ
டெண்வகை நிறைந்த நன்மகற் கல்லது
மகட்கொடை நேரார் மதியோ ராதலின்
அவையொருங் குடைமை யவர்வயி னின்மையின்
அதுபொய் யாத லதனினுந் தேறெனக்
காரணக் கிளவி நீர காட்டிச்
செவிலி தெளிப்பக் கவிழ்முக மெடுத்து
நெடுவெண் டானை வாங்கிக் கொண்டுதன்
வடிவே லுண்கண் வருபனி யரக்கித்
தோற்ற நிகர்ப்போ ரின்றி யாற்றல்
காலனோ டொக்கு ஞாலப் பெரும்புகழ்
புகரின் றோங்கிய நிகரில் கேள்வியன்
காம நுகர்வோர்க் காரணங் காகிய
ஏம வெண்குடை யேயர் மகனொடு
வையக மறியக் கையகம் புக்குத்
தானறி வீணை தனியிடத் தெழீஇக்
காணு மென்னுங் கட்டுரை யன்றியும்
உலக மாந்த ருள்ளங் கொண்ட
ஐயக் கிளவி தெய்வந் தேற்றினும்
தூய ளென்னாத் தீதுரை யெய்தி
வாசவ தத்தையும் வாழ்ந்தன ளென்னும்
ஓசை நிற்ற லுலகத் தஞ்சுவன்
எமர்தர வாரா தாயினு மிவணோற்
றவனுறை யுலகத் தழித்துப்பிறந் தாயினும்
எய்துதல் வலித்தனென் செய்வது கேளெனத்