பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   27
Zoom In NormalZoom Out


 

தெய்வ மாதர் திட்பங் கூற
அண்ணன் மருங்கி னாவது வேண்டும்
தன்மன முவந்தது தலைவர நோக்கி
ஏற்ற முன்கைத் தொடிவீழ்ந் தற்றாற்
கோற்றொடி கொண்ட கொள்கையென் றேத்தி
மிகுதியின் மிக்கதன் மேற்றிணைக் கேற்பத்
தகுவன கூறுந் தலைமகன் மகளென
உவகை நெஞ்சமொ டுவப்பன கூறிப்
பைந்தொடி யாயமொடு பன்னொடி பகர்ந்து
கங்குல் யாமத்துங் கண்படுத் திலையாற்
கல்விச் சேவகங் கடவோன் வருந்துணைப்
பல்பூங் கோதாய் பள்ளிகொண் டருளெனப்
பூமென் சேக்கையுட் புனையிழைப் புகீஇ
யான்வரு மாத்திரை யாரையும் விலக்கிக்
காஞ்சன மாலாய் காவல் போற்றெனத்
தொகுவேன் முற்றஞ் சிவிகையிற் போந்து
மயிலா டிடைகழி மாடத் தொருசிறைப்
பயில்பூங் கொம்பர்ப் பந்தர்மு னிழிந்து
கிளரிழை கற்குங் கேள்விப் பொழுதெனத்
தளரிய லாயமொடு தாய்முத லிசைப்பக்
கீத சாலை வேதிகை காக்கும்
கோல்கொள் சுற்றமொடு குமரன் புகுதர
இடுமணன் முற்றத் திவ்வழி வருகெனக்
கொடிமுதிர் குருகின் கொம்புதலைக் கொண்ட
உதிர்பூம் புன்கி னொருசிறை யிரீஇ
இனைத்திறம் பகருறு மெந்தையொ டென்னிடைக்
கிளைத்திறம் பகருநகர் தலைப்பெய லரிதெனக்
கண்ணினுஞ் செவியினு நண்ணுநர்ப் போற்றி
மண்ணகங் காவலன் மாபெருந் தேவி
திருவயிற் றியன்ற பெருவிறற் பொலிவே
இனையை யாவது மெம்மனோர் வினையென
யாக்கைய தியல்பினு மன்பினுங் கொண்டதன்
காட்சிக் கண்ணீர் கரந்தகத் தடக்கி
இன்ன ளென்றியா னென்முத லுரைப்பேன்
மன்னவன் மகனே மனத்திற் கொள்ளெனச்
செம்மற் செங்கோ னுந்தை யவையத்
தென்னிகந் தொரீஇயின னிளமையிற் கணவன்
தன்னிகந் தொரீஇயான் றகேஎ னாகக்
கொண்டோற் பிழைத்த தண்டந் தூக்கி
வடிக்க ணிட்டிகைப் பொடித்துக ளட்டிக்
குற்றங் கொல்லுமெங் கோப்பிழைப் பிலனென
முற்றந் தோறு மூதூ ரறிய
நெய்தற் புலைய னெறியிற் சாற்றிப்
பைதற் பம்பை யிடங்க ணெருக்கி
மணற்குடம் பூட்டி மாநீர்