யமுனை இடைக்கயத் தழுந்த விடீஇய செல்வுழிப் புனற்கரைப் படீஇயர் புதல்வரொ டார்க்கும் தோணி யரவஞ் சேணோய்க் கிசைப்பத் தழூஉப்புணை யாயமொடு குழூஉத்திரை மண்டி ஆவி நுண்டுகில் யாப்புறுத் தசைத்துப் பாகவெண் மதியிற் பதித்த குடுமிக் களிற்றொடு புக்குக் கயங்கண் போழ்வோய் அவ்வயி னெழுந்த கவ்வை யென்னென முந்தை யுணர்ந்தோர் வந்துநினக் குரைப்ப யாமுங் காண்கங் கூமின் சென்றெனக் கோல்கொண் மள்ளர் காலி னோடி நம்பி வேஎண் மம்பி வருகென ஆணையிற் றிரீஇய ரஞ்சன்மி னீரெனத் தோணி யிழிப்புழித் துடுப்புநனி தீண்டி நெற்றி யுற்ற குற்ற மிதுவென இதுமுத லாக வின்னே யிம்மகள் அழிதவப் படுத லாற்றுமென் றுரைத்த குறிகோ ளாள னறிவிகழ்ந் தெள்ளி எல்லை ஞாயி றிரவெழு மெனினும் பல்கதிர்த் திங்கள் பகல்படு மெனினுநின் சொல்வரைத் தாயிற் சொல்லுவை நீயென இன்னகை முறுவலை யாகி யிருங்களிற் றொண்ணுதன் மத்தகத் தூன்றிய கையை கொண்டோன் கரப்பவுங் கொள்கையி னிகப்போள் தன்குறிப் பாயுழித் தவமிவட் கெளிதென வம்ப மாக்கள் வாயெடுத் துரைத்த வெஞ்சொற் கிளவிநின் னங்கையி னவித்து வேண்டிய துரைமி னீண்டியான் றருகெனப் புலைமக னறையப் பூசலிற் போந்தேன் நிலைமை வேண்டியா னின்னகர் வாழ்வேன் தலைமகன் மகனே தவமென் றுணிவென நிகழ்வதை யுரைக்கு நிமித்திக் கஞரறப் புகழ்வினை யாகிப் பூக்கொண் டெறிந்தபின் மற்று மவனே கற்றது நோக்கி யானை யணிநிழற் படுதலி னந்தணி தான்கொண் டெழுந்த தவத்துறை நீங்கித் தானை வேந்தன் றாணிழற் றங்கி முற்றிழை மகளிர்க்கு முதுக ணாமெனச் செவ்வகை யுணர்ந்தோன் சேனைக் கணிமகன் கோசிக னென்றவன் குறிப்பெயர் கூறி அடையாண் கிளவியொ டறியக் கூறலும் கடிதார் மார்பனுங் கலிழ்ச்சி நோக்கிப் பிறப்பிடை யிட்டே னாயினு மெனக்கோர் சிறப்பின ராத றேற்றுமென் மன

|