னெனக் கண்டதற் கொண்டு தண்டா தூறுமென் அன்புகரி யாக வறிபுதுணி கல்லேன் இன்றிவை கரியா வினித்தெளிந் தனனென உதயண குமர னுணர்ந்தமை தேற்றலும் மறைமூ தாட்டி மற்றுங் கூறும் கதிர்வினை நுனித்தநின் கணியெனைக் கூறிய எதிர்வினை யெல்லா மெஞ்சா தெய்தி இந்நகர்ப் பயின்றியா னிந்நிலை யெய்திற் றென்னி னாயிற் றென்குவை யாயின் என்முதல் கேளெனத் தொன்முத றொடங்கி ஆக்கையி னிழிந்துநின் னருளிற் பிறந்தவென் நோக்கரு நல்வினை நுகரிய செல்கெனக் கொற்றவன் மகனே பற்றாது விடுவேன் நீராட் டியலணி நின்வயி னீங்கியப் பேர்யாற் றொருகரைப் பெயர்ந்தனென் போகிக் கெங்கா தீரத்துத் தேசங் கெழீஇ அங்காங் கொல்வனென் றாத்திரை முன்னி வம்பலர் மொய்த்ததோர் வழிதலைப் பட்டு வயிரச் சாத்தொடு வடதிசைப் போகி அயிரிடு நெடுவழி யரசிடை யிருந்துழிப் பூதியு மண்ணும் பொத்தகக் கட்டும் மானுரி மடியு மந்திரக் கலப்பையும் கானெடு மணையுங் கட்டுறுத் தியாத்த கூறை வெள்ளுறிக் குண்டிகைக் காவினர் தரும தருக்கர் தற்புறஞ் சூழப் பரிபு மெலிந்த படிவப் பண்டிதன் சாங்கிய நுனித்தவோர் சாறயர் முனிவனை ஆங்கெதிர்ப் பட்டாங் கவனொடும் போகி அத்தவப் பட்டாங் கறுவகைச் சமயமும் கட்டுரை நுனித்த காட்சியே னாகி இமயப் பொருப்பகத் தீராண் டுறைந்தபின் குமரித் தீர்த்த மரீஇய வேட்கையின் அருந்தவ நுனித்த வறவா சிரியன் தருமவாத் திரையெனத் தக்கணம் போந்துழி மாவுஞ் சேனை மதிற்புறங் கவைஇய காள வனத்தோர் கபாலப் பள்ளியுட் செலவயா வுயிர்த்த காலை நூற்றுறை யாற்றுளிக் கிளந்த வறுவகைச் சமயமும் ஏற்றல் காணுமெம் மிறைவன் றானென மாற்றக் கோடணை மணிமுர சறைதலிற் கற்றோர் மொய்த்த முற்றவை நடுவண் தாழாப் பெரும்புகழ்க் காளக் கடவுண்முன் பாலக

|