பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   30
Zoom In NormalZoom Out


 

னென்னும் பண்ணவர் படிவத்துக்
காள சமணன் காட்சி நிறுப்ப
ஐம்பெருஞ் சமயமு மறந்தோற் றனவென
வேந்தவ ணுதலிய வேதா சிரியரும்
தாந்தம் மருங்கிற் றாழங் காட்டிச்
சாங்கிய சமயந் தாங்கிய பின்னர்
நல்வினை நுனித்தோ னம்மொடு வாழ்கெனப்
பல்வேல் வேந்தன் பரிவுசெய் தொழுகலின்
எழுந்த வாத்திரை யொழிந்தீண் டுறைவுழிக்
கையது வீழினுங் கணவ னல்லது
தெய்வ மறியாத் தேர்ந்துணர் காட்சிப்
படிவக் கற்பிற் பலகோ மகளிருட்
டொடியோ டம்மனை தோழி யெனத்தன்
குடிவழி யாகக் கொண்ட கொள்கையின்
இத்தவ முவக்கும் பத்தினி யாதலிற்
றவஞ்சார் வாகத் தலைப்பெயல் விரும்பி
அறஞ்சார் வாக வன்புசெய் தருளி
இறைமக னறிய வின்றுணை யாகிப்
பிறைநுதன் மாதர் பிறந்த யாண்டினுள்
நாவொடு நவிலா நகைபடு மழலையள்
தாய்கைப் பிரிந்துதன் றமர்வயி னீங்கி
என்கைக் கிவரு மன்பின ளாதலிற்
றாயென் றறிந்தன ணீயினி வளர்க்கெனக்
காதல் வலையாக் கைத்தரக் கொண்டவள்
பால்வகை யறிந்தபின் படர்வேன் றவமென
மைத்துன மங்கை மரூஉமா கண்டு
நட்புவலை யாக நங்கையொ டுறைவேன்
ஒன்பதிற் றியாட்டை யுதயண கேளெனத்
தன்வயிற் பட்ட தவ்வயிற் கிளரி
அகம்புரி செம்மை யன்பிற் காட்டி
மனமுணக் கிளந்த மந்திரக் கோட்டியுட்
புள்ளு மாவு முள்ளுறுத் தியன்ற
ஆண்பெயர்க் கிளவி நாண்மகிழ் கடவ
வழுக்கிக் கூறினும் வடுவென நாணி
ஒழுக்க நுனித்த வூராண் மகளிர்
தாநயந் தரற்றினுந் தக்குழி யல்லது
காமுறற் கொவ்வாக் கயக்கமி லாளநீ
ஒட்டாக் கணிகையைப் பெட்டனை யென்பது
புலவோர் தெரியிற் பொருத்தமின் றாகி
அலவலை நீர்த்தா லத்தைநின் னலரென
மற்றவள் வினவவும் பற்றிய தவிழான்
பண்டறி வுண்டெனப் பகைநிலத் துறைந்த
பெண்டிரைத் தெளிந்து பெருமறை யுரைத்தல்
நுண்டுறை யாளர்