நூலொழுக் கன்றெனத் தேறாத் தெளிவொடு கூறா தடக்கி மாயமென் றஞ்சின் மற்றிது முடிக்கும் வாயி லில்லென வலித்தனன் றுணிந்து தாய்முத லிருந்துதன் னோய்முத லுரைப்ப ஒள்ளிழை கணவனு முரிமையுட் டெளிந்த கொள்கை யறிந்தியான் கூறவும் வேண்டா அருமறை யன்மையி னன்பிற் காட்டி ஒருவயி னொண்டொடிக் குற்றது கேளென ஏதின் மன்னர் தூதுவ மாக்கள் வந்தது வடுவெனத் தந்தையொ டூடி அறத்தா றன்றியு மாகுவ தாயின் துறத்தல் வேண்டுந் தூய்மை யோற்கெனத் துணிவுள் ளுறுத்த முனிவின ளாகி நன்மணி யைம்பா னருமதைக் கரற்றிய மன்ன குமரன் மனம்பிறி தாயினும் எந்தையும் யாயு மின்னகை யாயத்துப் பைந்தொடிச் சுற்றமும் பலபா ராட்ட மாசில் வீணை மடமொழிக் கீந்தோன் ஆசா னென்னுஞ் சொற்பிறி தாமோ அண்ணற் குமரற் கடிச்செருப் பாகெனத் தன் மனங் கொண்டவ டாவ முற்றிச் சாவினை துணியு மாத்திரை யாவதும் மறுவொடு மிடைந்து மாண்பில வாகிய சிறுசொற் கிளவி கேளல செவியென அங்கையிற் புதைஇ யணிநிற மழுகிய நங்கையைத் தழீஇ நன்னுத னீவி மனங்கொள் காரண மருளக் காட்டி இனமி லொருசிறை யின்னினி தாகப் பூமலி சேக்கையுட் புகுத்தினென் போந்தேன் பாயலு ளாயினும் பரிவவ டீர்கென இஃதவ ணிலைமை யின்னினிக் கொண்டு பரிவுமெய்ந் நீங்கிப் பசலையுந் தீர்கென ஒண்ணுதன் மாதர் கண்ணேப் பெற்ற புண்ணுறு நெஞ்சிற் புலம்புகை யகல மாதர் நுதலிய மருந்தியற் கிளவி ஆருமி லொருசிறை யன்புறப்

|